அறிமுகம்



ஸ்ரீ சாயிமார்க்கம் - ஷிர்டி சாயிபாபாவிற்கான முழுமுதல் ஆன்மிக பத்திரிகை. 
தங்களைப் போன்ற சாயி பக்தர்கள் மற்றும் அடியவர்களின் ஆதரவால் தொடர்ந்து வெளி வரும் ஸ்ரீ சாயிமார்க்கம் ஆன்மிக இதழின் கடந்த 15 ஆண்டு கால பக்தி இலக்கிய மற்றும் சாயி சேவையின் பலனாக ஷிர்டி சாயிநாதர் உலகின் மிக அதிசய பச்சைநிற மரகத சாயிபாபாவாக ஷிர்டியில் இருந்து எழுந்தருளியுள்ளார்.

அபூர்வமான ஆகர்ஷணம் நிறைந்த இந்த பச்சைநிற மரகத  சாயிபாபா சிலையை பிர திஷ்டை செய்து அவருக்கென தனி ஒரு பிரத்யேக ஆலயம் எழுப்ப பாபா அருளால் சென்னை ஊரப்பாக்கத்தில் நிலம் வாங்கப்பட்டு நமது அறக்கட்டளை பெயரில் பதிவும் செய்யப்பட்டுள்ள மகிழ்ச்சியான செய் தியை  தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சென்னை அயோத்தியா மண்டபத்தில் ஆண்டு தோறும்  நாங்கள் நடத்தி வரும் 1008 சங்கா பிஷேகம், ஷிர்டி சாயி லிகித நாம ஜப ஹோமம் மற்றும் ஸ்ரீ சாயிமார்க்கம் விருதளிப்பு விழா பற்றி யும் தாங்கள் அறிவீர்கள் 

ஸ்ரீ சாயிமார்க்கம் இதழின் இத்தகைய ஆன்மிக சேவையை ஷிர்டி சாயிதேவர் அங்கீகரித்த தன் அடையாளமாக அவரே ஷிர்டியில் இருந்து பச்சைநிற சாயிபாபா வடிவில் எழுந்தருளியிருக் கிறார்.

பல்வேறு இடங்களில் அவரை வைத்து 108 சங்கல்ப பஜனைகள் செய்து அவரது பூரண ஆசிகளை வேண்டியதை அடுத்து  சென்னை மேற்கு மாம்பலத்தில் தரிசன மையம் தொடங்கி அன்றாட வழிபாடுகள்,சிறப்பு அபிஷேகங்கள், பஜனைகள், பிரார்த்தனைகள், அன்னதானம், பாரா யணம், சத்சங்கம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம். இதனால் பல்வேறு பக்தர்களின் வேண்டுதல்களை பாபா நிறை வேற்றி அருள் பாலித்து வருகிறார். 

மரகத சாயிபாபா இங்கு புதன் கிரஹ அம்சமாக அருள் பாலித்து வருகிறார்.அவர் செய்து வரும் அற்புதங்களும் மகிமைகளும் அனேகம்.அவருக்கு ஒரு தனி ஆலயம் அமையும் முன்னரே அவர் இங்கு சிலை வடிவில் எழுந்தருளி ஆலயம் அமைவதற்கான பிற ஏற்பாடுகளை நேரில் கண் காணித்து வருவதும் இன்னொரு சிறப்பு.

சாயி தம்பதியர் ஊரப்பாக்கத்தில் இருந்த அவர்கள் இடத்தை  பூமிதானமாக அளித்து பாபாவின் அருளுக்குப் பாத்திரமாகியுள்ளனர்.அதைப்போல தங்களைப் போன்ற சாயிபக்தர் களும் இவ்வாலயம் அமைய ஆலய கட்டுமானப் பணிகளுக்கு உதவி செய்து பாபா அருள் பெற முன் வருமாறும் அவர் பாதம் வணங்கி வேண்டிக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக